Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு – திருச்சியில் நாளை விடுமுறை!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (15:21 IST)
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடப்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொள்ள திருச்சி மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்கள் பலவற்றில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளை நடைபெறும் நிலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. அதிகாலை 4.45 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில், இந்நிகழ்வை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments