Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மோடிக்கு கோவில்! – விவசாயியின் பிரதமர் பாசம்!

Webdunia
புதன், 25 டிசம்பர் 2019 (11:37 IST)
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும் “கோ பேக் மோடி” ட்ரெண்டாகி வரும் அதே தமிழகத்தில் மோடிக்கு கோவில் எழுப்பி வணங்கி வருகிறார் விவசாயி ஒருவர்.

திருச்சி அருகே உள்ள துறையூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். சிறுவயது முதலே மோடியின் தீவிர ரசிகராக இருந்த சங்கர் மோடிக்கு கோவில் கட்ட எண்ணியுள்ளார். அதன்படி தனது விவசாய தோட்டத்தில் ஒரு பகுதியில் மோடியின் அரை உருவ சிலை ஒன்றை நிர்மாணித்து கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார். தினமும் பாலபிஷேகம், தீபாராதனை காண்பித்து வழிபட்டு வருகிறாராம்.

இதுகுறித்து கூறியுள்ள சங்கர் ‘நான் சிறுவயது முதலே மோடியின் தீவிர ரசிகனாக இருந்தேன். அவருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. ஆனால் விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் அது முடியவில்லை. தற்போது கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு இந்த கோவிலை கட்டியுள்ளேன். விரைவில் கட்சி தலைவர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்யலாம் என இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments