Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக தேதி அறிவிக்கப்பட்ட திமுக திருச்சி மாநாடு!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (15:08 IST)
திமுக திருச்சி அருகே நடத்தும் சிறுகனூர் மாநாடு மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே உள்ள சிறுகனூர் என்ற இடத்தில் திமுக நடத்தும் பிரம்மாண்டமான மாநாடு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. முதலில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நடக்க இருந்த மாநாடு பின்னர் 400 ஏக்கராக மாறியது. அதனால் பணிகள் முடிய தாமதமானதால் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்போது ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 7 ஆம் தேதி மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments