Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (07:40 IST)
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, திருச்சி, அரியலூர், தஞ்சை போன்ற கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளார்.
 
அதேபோல் அரியலூர் மாவட்டத்தை அடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே திருச்சி, அரியலூர் என 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிகிறது. குறிப்பாக சென்னையில் இன்று காலை மழை இல்லை என்பதால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிகிறது
 
மேலும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 2 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்துள்ளதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments