விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சிம்பு அஞ்சலி.! திருமதி. பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்.!!

Senthil Velan
சனி, 27 ஜனவரி 2024 (08:45 IST)
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சிம்பு மரியாதை செலுத்தினார்.
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், நாள்தோறும் மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
அதேபோல் அரசியல் பிரமுகர்களும், திரைத் துறையினரும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில்  தேமுதிக தலைமை கழகத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் இல்லத்திற்கு அவர் நேரில் சென்றார்.   அங்கு, திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த கேப்டனின் புகைப்படத்திற்கு நடிகர் சிம்பு மரியாதை செலுத்தினார். அப்போது விஜயகாந்தின் இரண்டு மகன்களும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments