Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுடுகாட்டையும் விட்டு வைக்காத ஈஷா மையம் – ஊர் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (12:29 IST)
பழங்குடியின மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டினை ஈஷா யோகா மையத்தினர் ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின ஊர்த் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் அருகே மடக்காடு என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டினை காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், சுற்றுவட்டார நிலங்களை விலைக்கு வாங்கியுள்ள ஈஷா யோகா மையம் தாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின மக்களின் சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், நில அளவை செய்து யோகா மையத்தினர் சுடுகாட்டின் நடுவில் கல் நட்டுவைத்து உள்ளதாகவும் பழங்குடியின மக்கள் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து, தங்களது சுடுகாட்டினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடியின மக்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர்.
 
பழங்குடியின மக்களின் சுடுகாட்டையும் ஈஷா மையம் விட்டுவைக்கவில்லை என புது புகார் கிளம்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments