Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (05:20 IST)
போக்குவரத்து வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

 
தமிழகம் முழுவதும் நாள்தோறும் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிர்பலி மற்றும் பொருட்சேதம் அதிகமாக  நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாகனங்களை கவனக்குறைவும்,  அதிவேகமாகவும்  இயக்குவதுதான்.
 
மேலும், கடந்த காலங்களில், பள்ளி வாகனங்கள் பெரும் விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானார்கள். இதனால், ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.
 
இந்த நிலையில், 2015ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியும், அதற்கு பின்பும்  தயாரிக்கப்படும் பேருந்துகள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களில், 80 கி.மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்கமுடியாத அளவு  வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வேண்டும்.
 
மேலும், பள்ளி வாகனங்கள் மற்றும் குப்பை வாகனம் மற்றும் கழிவு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் மற்றும் லாரிகள் ஆகியவற்றில் 60 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இயங்கமுடியாத அளவு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 
 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments