Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது: பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (08:06 IST)
ஸ்விக்கி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது: பரபரப்பு தகவல்
கோவையை சேர்ந்த ஸ்விக்கி உணவு டெலிவரி பணி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் தாக்கியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கோவை நீலம்பூர் என்ற பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று ஒரு பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்றதை அடுத்து அந்த வழியாக சென்ற ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணை இடித்தது தொடர்பாக தட்டி கேட்டார்.
 
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலர் சதீஷ், மோகனசுந்தரரை அடித்துள்ளார். பெண்ணை இடித்த பள்ளி வாகனம் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவருடைய செல்போனையும் காவலர் சதீஷ் பிடுங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
 
இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் மோகனசுந்தரம் புகார் அளித்ததை அடுத்து போக்குவரத்து காவலர் சதீஷ், பணியிடை நீக்கம் செய்ததுடன் அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments