Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களத்தில் இறங்கிய அதிமுக அமைச்சர்: மக்களை ஈர்க்க திட்டமா??

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (19:46 IST)
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை அடுத்த நன்னியூரில் மக்களோடு மக்களாக டீ குடித்த செய்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் பல நாட்களாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.விஜயபாஸ்கர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் நேற்று கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை அடுத்த நன்னியூரில் மக்களை சந்திக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தேனீர் கடைக்குள் சென்று அங்கு அமர்ந்து மக்களோடு மக்களாகத் தேனீர் அருந்தினார்.

தேனீர் அருந்திய பின்பு அந்த தேனீர் கடையிலுள்ள செய்தி தாள்களையும் வாசித்தார்.

பின்னர், அமைச்சர் எம்.விஜயபாஸ்கர் மக்களோடு மக்களாக தேனீர் அருந்திய செய்தி அந்தப்பகுதியில் காட்டு தீ போல் பரவியது. மேலும் மக்கள் இந்த சம்பவத்தை அறிந்து ஆச்சர்யமாக உணர்ந்தனர்.

இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மக்களோடு மக்களாகச் சென்று தேனீர் அருந்திய செய்தி சுற்றுவட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments