Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன அதிபர் வருகை எதிரொலி: ரயில்களும் நிறுத்தப்படுகிறதா?

Webdunia
வியாழன், 10 அக்டோபர் 2019 (20:12 IST)
சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

ஏற்கனவே சீன அதிபரின் வருகையை அடுத்து சாலை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ரயில்களும் சிறிது நேரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சீன அதிபரின் வருகையால் பொதுமக்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவின் அதிபர் நம்மூருக்கு வருவது பெருமைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது

சீன அதிபரின் இந்திய வருகை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுவதால் உலக மீடியாக்கள் சென்னையில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments