Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபரீதம்.. தந்தை-மகள்கள் பரிதாப பலி..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (08:17 IST)
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியான தந்தை மகள்கள் குறித்த சோக நிகழ்வு திருவள்ளூர் அருகே நடந்துள்ளது.

திருவள்ளூர் அருகே பெருமாள் பட்டியை சேர்ந்த மனோகர் என்பவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க   தனது இரண்டு மகள்களுடன் சென்றுள்ளார்.

அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை அவர்கள் மூவரும் கடக்க முயன்ற போது திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயில் மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில்  சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 இந்த நிலையில் உயிரிழந்த மூன்று பேரின் சடலத்தையும் ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருபக்கமும் ரயில் வருகிறதா என்பதை பார்த்து கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments