Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என்ற ஆளுனரின் பேச்சுக்கு டி.ஆர்.பாலு விமர்சனம்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (18:32 IST)
ஆளுனர் ஆர்.என்,ரவியின் பேச்சுக்கு திமுக எம்பி டி.ஆர். பாலு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு   தமிழ்நாடு ஆளுனராக ஆர்என்.ரவி  பதவியேற்றார். அவ்வப்போது, அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில்  கலந்துகொண்டு அவர் பேசும்போது, அரசியல் பேசிவருவதாகவும், வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகவும்,  மத ரீதியான கருத்துகள் கூறிவருவதாகவும்  அவர் மீது எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி  ‘’மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை ‘தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என தெரிவித்திருந்தார்.

ALSO READ: முதல்வருக்காக 2 மணி நேரம் காத்திருந்த ஆளுனர்.. கிறிஸ்துமஸ் விழாவில் பரபரப்பு!
 
அவரது இந்த கருத்திற்கு அரசியல் கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியினான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்பியும் , அக்கட்சியின் பொருளாளருமான  டி.ஆர்.பாலு கூறியுள்ளதாவது: தமிழ்நாடு, தமிழன், திராவிடம் என்பவை ஆளுனர் ரவிக்கு கசப்பாக இருக்கின்றன. திராவிடக் கட்சிகள் தான் பிரிவினையை வளர்த்தது எனக் கூறுகிறார். அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் எனப் பிரித்தது இந்த திராவிடமல்ல.; இவருக்கு பாஜக தலைவராகும் ஆசையிருந்தால், ஆளுனர் பதவியை விட்டு விட்டு இதுபோல் அபத்தமாக பேசட்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments