Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !

Webdunia
ஞாயிறு, 30 ஜூன் 2019 (15:09 IST)
சென்னை பல்லாவரம்  அருகே உள்ள பகுதியில் ஆறு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை அடுத்து போலீஸார் ஓட்டுநரை கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அருகே  உள்ள நாகல்கேணியை சேர்ந்த 6 வயது சிறுமொ ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்  பாண்டியன் என்பவர், சிறுமையைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் சிறுமி வீட்டிற்கு வந்ததும் தனக்கு உடல்வலிப்பதாகக் கூறியுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தனர். 
 
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், பாண்டியனை பிடித்து சரமாரியாக அடித்து, தாம்பரம் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்து, புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் பாண்டியனிடன் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்