Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை படுவீழ்ச்சி: கிலோ ரூ.2 என்பதால் பறிக்காமல் விடும் விவசாயிகள்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (15:50 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகியது. ஆனால் தற்போது இதன் விலை தலைகீழாக உள்ளது.
 
தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென இறங்கி கடந்த சில நாட்களாக கிலோ ரூ.10 என விற்பனையானது
 
இந்த நிலையில் இன்று தர்மபுரி மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து மிக அதிகமாக இருந்ததால் கிலோ ரூ2க்கும் ஒரு கூடை தக்காளி ரூ.30க்கும் விற்பனையாகி வருகிறது. பறிப்பு கூலி மற்றும் வண்டி வாடகை கூட தேறாததால் கவலையடைந்த தக்காளி விவசாயிகள் மீதமுள்ள தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதனால் தக்காளி அழுகி, கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments