Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த திட்டம்! – நாளை தடுப்பூசி முகாம்!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (08:18 IST)
தமிழகத்தில் நாளை 8வது கொரோனா மெகா தடுப்பூசி திட்டம் நடத்தப்படும் நிலையில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா பரவல் தீவிரமடைந்திருந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் முதலாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தபட்ட நிலையில் 1,53,13,382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 8வது தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments