Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (09:42 IST)
நாளை வீடுகள்தோறும் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற இருப்பதால் ரேசன் கடைகள் செயல்படாது என அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணமாக ஆயிரம் ரூபாய் பணமும், ஏப்ரல் மாத ரேசன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் மக்கள் கூட்டம் ரேசன் கடைகளில் கூடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிற்கே வந்து டோக்கனுடன் நிவாரண பணமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அதன்படி நாளை ஏப்ரல் மாத ரேசன் பொருட்களை யார் எந்த தேதியில் பெற்றுக்கொள்வது என்பது குறிப்பிடப்பட்ட டோக்கனும், ஆயிரம் ரூபாய் பணமும் நாளை ஒவ்வொரு வீடுகளிலும் ரேசன்கடை ஊழியர்கள் வழங்க இருக்கிறார்கள். அதனால் ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                      

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments