Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (19:49 IST)
அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இரு மாவட்டங்களுக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாகவும்,  கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ''அதிகனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும்    நாளை (டிசம்பர்19)  பொதுவிடுமுறை அறிவித்து'' தமிழ்நாடு அரசு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments