Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:12 IST)
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
தமிழகம் முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு விழா அன்று புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
மாவட்ட அளவில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, நாளை ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை ஈடுசெய்யும் வகையில் 27ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை பள்ளி, கல்லூரிகள் , அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அரசு கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்."
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிப்பா?

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! விலங்குகள் நல ஆர்வலர்கள் மீது பொதுமக்கள் கோபம்..!

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் சீனாவுக்கு வரி விதிக்காதது ஏன்? - ட்ரம்ப் உருட்டு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments