Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தையில் பாதியாக குறைந்த தக்காளி விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (07:30 IST)
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தக்காளி விற்பனையான நிலையில் தற்போது பாதியாக குறைந்துள்ளதாக வெளியாகி இருந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மொத்த விலையாக ₹50 என விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது
 
தக்காளி வரத்து தற்போது அதிகமாக இருப்பதாகவும் அதனால் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை மொத்த விலையாகவும், சில்லரையில் 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் தக்காளி மட்டுமே வந்த நிலையில் இன்று 800 டன் தக்காளி வந்து இருப்பதாகவும் இதனால் தக்காளி விலை சரிந்திருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இனி தக்காளி விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments