Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை - மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 26 மே 2022 (09:57 IST)
சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்தது.
 
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்தது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்தது. கடந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் தற்போது வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றை விட இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ தக்காளி விலை ரூ.120-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.80 வரை கணிசமாக குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments