கிலோ ரூ.40 - மார்கெட்டில் தக்காளி விலை மேலும் குறைந்தது!!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (10:24 IST)
தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. 

 
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்தது.
 
இதனால் தக்காளி விலை தொடர்ந்து விலை உயர்ந்தது. வடமாநிலங்களில் இருந்து வரவேண்டிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் தவிர ஏனைய சில காய்கறிகளும் விலை உயர்ந்தது. தக்காளி வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.120-ல் இருது ரூ.80 வரை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.80 வரை விற்ற நிலையில், இன்று கிலோ ரூ.40க்கு விற்பனை ஆகிறது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்.. அமைச்சர் சேகர்பாபு, மேயர் ப்ரியா பேச்சுவார்த்தை..!

கரூர் சம்பவத்தில் விஜய் செய்தது சரிதான்!.. முட்டுக்கொடுக்கும் நாஞ்சில் சம்பத்!...

சிபிஐ அலுவலகத்தில் விஜய்!.. அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் என்ன?.. பரவும் தகவல்!...

கரூர் சம்பவம்!.. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்!...

விண்ணில் ஏவப்பட்ட PSLV-C62 ராக்கெட் தோல்வி.. மூன்றாவது நிலையில் வழித்தடம் மாறியது..!

அடுத்த கட்டுரையில்
Show comments