Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகமாக வசூலிக்கும் சுங்கச் சாவடி : முற்றுகையிட வேன் ஓட்டுனர்கள் : கரூரில் பரபரப்பு

அதிகமாக வசூலிக்கும் சுங்கச் சாவடி : முற்றுகையிட வேன் ஓட்டுனர்கள் : கரூரில் பரபரப்பு

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (17:11 IST)
கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் சுங்கச் சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும், டேல்கேட் என்ற பெயரில் நிர்வாக சீர்கேட்டில் கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக கூறி சுற்றுலா வேன் ஓட்டுநர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி அருகே தனியாருக்கு சொந்தமான சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. கரூரிலிருந்து இந்த வழியாக செல்லும் சுற்றுலா வேன்களுக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக தொகை கேட்பதாகவும், அதை கேள்வி கேட்டால் ஆர்.சி கேட்பதாகக் கூறி சுமார் 50 க்கும் மேற்பட்ட சுற்றுலா ஓட்டுநர்கள் சங்கத்தினர் அந்த பகுதியில் முற்றுகையிட்டு சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


 

 
மேலும், தமிழகத்தில் எந்த சுங்கச் சாவடியிலும் இல்லாத வகையில் இங்கு மட்டும் அதிக தொகை கேட்பதாகவும் குற்றம்சாட்டினர். கரூரிலிருந்து திருச்சி செல்ல 5 வழிகளும், திருச்சியிலிருந்து கரூர் வர 5 வழிகள் என்று மொத்தம் 10 வழிகள் உள்ள நிலையில் திருச்சி செல்ல 2 வழிகளும், கரூர் வருவதற்கு 2 வழிகளும் மட்டும் இயங்குவதாக குற்றம் சாட்டிய ஒட்டுநர்கள், இதனால் பல மணி நேரம் வாகனங்கள் மணிக்கணக்கில் தேங்குவதாகவும் குற்றம் சாட்டினார்கள். 


 

 
இந்த டி.கே.டி.ஆர்.பி.எல் நிர்வாக சீர்கேடு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், நிர்வாக சீர்கேட்டிலும், அவ்வப்போது பயணிகளும், வாகன ஒட்டிகளும், உரிமையாளர்களும் சிரமப்படுவதாக குற்றம் சாட்டிய அவர்கள் சுமார் 2 மணி நேரமாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனையடுத்து அங்கு வந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் ஓட்டுநர்களிடமும், சுங்கச்சாவடி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுநர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு பாதையில் மட்டும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
சி.ஆனந்த குமார் - கரூர் செய்தியாளர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments