Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 11 மே 2020 (08:11 IST)
தமிழகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் பெரும்பாலானோர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 669 பேர்களும் அதில் சென்னையில் மட்டும் 509 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த 64 வயது பெண் ஒருவரும், கொளத்தூரை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும் இன்று கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
 
இதனையடுத்து கொரோனாவால் சென்னையில் பலி எண்ணிக்கை 30ஆகவும், தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 49ஆகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களும் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலையும் திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments