Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 4 மாவட்டங்களில் கனமழை.. அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை

Rain
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (13:28 IST)
இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் அடுத்த ஏழு நாட்களுக்கு பரவலாக மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் அக்டோபர் 05 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தியில் இருந்து ஜோடோ பாதயாத்திரை.. ராகுல் காந்தி திட்டம்..!