Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் பெட்ரோல் விலையை உயர்த்தாத மத்திய அரசு

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (07:41 IST)
கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது
 
ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றும் இதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இந்தியாவில் மிக அதிகமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 86வது நாளாக பெட்ரோல் டீசல் விலை சென்னையில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்று விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments