Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு! 130 மையங்களில் 41,000 பேர் எழுதுவதாக தகவல்..!

Siva
ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (08:00 IST)
பள்ளி கல்வித்துறையில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும்  130 மையங்களில் 41485 பேர் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில் 2582 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை அடுத்து இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு இன்று நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2ல் வெற்றி பெற்றவர்கள் இந்த தேர்வை என்று எழுத உள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 தமிழகம் முழுவதும் இன்று பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து தேர்வு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments