Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று சென்னை வருகிறார் டிடிவி தினகரன்: எதற்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (06:29 IST)
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.60 கோடி இடைத்தரகர் சுகேஷ் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன் நேற்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரனுக்கும், அவருடைய நண்பருக்கும் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு  டெல்லி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.



 


மேலும் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர்களை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் மனு செய்தனர். இதையடுத்து, தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

தினகரனை காவலில் எடுக்க அனுமதி கிடைத்ததை அடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அனேகமாக இன்று மாலை அவர்கள் சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments