Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்.. மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்..!

Siva
புதன், 21 பிப்ரவரி 2024 (07:07 IST)
சென்னை மாநகராட்சியின் 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா தாக்கல் செய்கிறார் என்றும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது.

கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூட இருக்கும் நிலையில் மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாகவும் இதில் சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு  சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ 340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் நாளை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments