Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை! போராட்டத்தை தடுக்க சதியா?

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (08:25 IST)
பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு உள்பட நால்வர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று பொள்ளாச்சி, கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர்
 
இந்த போராட்டம் காரணமாக நேற்று பொள்ளாச்சியில் உள்ள சில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாணவிகளின் போராட்டத்தை வலுக்கட்டமாக போலீசார் தடுத்து அவர்களை கலைய செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கமல்ஹாசன் உள்பட ஒருசில அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பாலியல் கொடூர விவகாரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளின் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் உள்ள ஒருசில கல்லூரிகளுக்கு 2வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுமுறை அளிக்கப்பட்டாலும் மாணவ, மாணவிகள் இன்றும் பொது இடங்களில் கூடி போராடம் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் வழக்கத்தை விட கூடுதலாக பொள்ளாசி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்