Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று சென்னை வரும் 6 லட்சம் தடுப்பூசிகள்! – நாளை முதல் முகாம்கள் தொடங்க வாய்ப்பு!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (16:59 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 6 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலில் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் அடிக்கடி தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் முகாம் அமைத்து போடப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை மத்திய அரசு ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments