Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்தி வந்தால் கடும் நடவடிக்கை! – போக்குவரத்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (08:42 IST)
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரியும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பணிமனை ஊழியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரியும் நிலையில் அவ்வபோது போக்குவரத்து கழகம் குறித்து வரும் புகார்களின் அடிப்படையில் பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.

அவ்வாறாக தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புகை பிடித்தல் மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ALSO READ: தொடர் மழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு!

பேருந்து பணிமனைக்குள் விலங்குகள் அடிப்பட்டி இறக்கலாம் என்பதால் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை உள்ளே அனுமதிக்கக் கூடாது. விபத்து ஏற்படும் வாய்ப்பை தவிர்க்க பணிமனைக்குள் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

பேருந்து பணிமனைக்குள் தீ பற்றும் அபாயம் உள்ளதால் எளிதில் தீ பற்றும் பொருட்களை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாத பணிமனை பணியாளர் தொழில்நுட்ப பணிக்காக பேருந்துகளை இயக்கக் கூடாது.

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

Edited by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments