டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்கள்..!

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:30 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நிலையில் அதன் முடிவுகள் அதே ஆண்டு ஜூன் மாதம் வெளியானது.

அதனை அடுத்து  2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்மை எழுத்துத்தேர்வு நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த பின் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் 95 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேர் நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு 2023 நவம்பர் 4,5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் என தெரிகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments