Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தெருவை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி: என்ன நடக்குது டி.என்.பி.எஸ்.சி தேர்வில்?

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (08:32 IST)
சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய தாலுகாக்களில் தேர்வு எழுதியவர்கள், தரவரிசைப் பட்டியலில் முதல் 39 இடங்களைப் பிடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பலர் முறைகேடு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டு இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர் வெற்றி பெற்றிருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி  குரூப் 2 தேர்வில் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களில் 60 இடங்களை பிடித்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
 
ஒரே தெருவை சேர்ந்த 12 பேர் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தற்போது அதிகாரிகளாக இருப்பவர்கள் கடலூரில் உள்ள மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டுள்ளதாகவும், இன்றைய விசாரணையில் 12 அரசு அதிகாரிகள் முறைகேடு செய்து வேலை பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் தோண்ட தோண்ட மர்மங்கள் அதிகரித்து வருவதால் டி.என்.பி.எஸ்.சி அமைப்பு மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments