Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச மின்சாரம் அளிப்பது நிறுத்தப்படாது! – மின்சார வாரியம் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (11:52 IST)
புதிய விவசாய மின்சார இணைப்புகளுக்கு மீட்டர்கள் பொருத்தப்படும் நிலையில் இதனால் இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புகளின் பயன்பாட்டை அறிய மீட்டர் கருவி பொறுத்தும் பணி துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் விவசாயிகள் 5 குதிரை திறனுக்கு மேல் மோட்டார் பயன்படுத்தினால் தலா 20 ஆயிரம் ரூபாய் ஜூன் மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்ற மின்வாரியத்தின் அறிவிப்பும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட இணைப்புக்கு ஒரு (HP) குதிரை திறனுக்கும் 20 ஆயிரம் வைப்பு தொகை செலுத்தவும் விவசாயிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரியம் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் எனவும், விவசாய பயன்பாட்டிற்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என கணக்கிடவே மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இலவச மின் இணைப்பு அளிக்கும்போது மீட்டர் பொருத்தும் நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடைமுறையில் இருப்பதாகவும் விளக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments