Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தாங்குமா தமிழகம்?

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தாங்குமா தமிழகம்?
, வியாழன், 19 நவம்பர் 2015 (14:00 IST)
தென் கிழக்கு அரபிக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 
 
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழை இப்போதுதான் நின்றிருக்கிறது. 
 
சென்னை மற்றும் தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை, கடலூர், திருவாரூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 
 
அதன்பின் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக இப்போது ஆந்திராவில் கனத்த மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில், தென் கிழக்கு அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார்.
 
இது பற்றி தகவல் தெரிவித்த அவர் “தமிழகத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது.
 
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்கள்) கனமழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்யும். சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். 
 
தமிழகம், புதுவையில் நாளையும், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும். 21ஆம் தேதி காலை முதல் 22ஆம் தேதி காலை 8.30 மணி வரை மழை இருக்காது. அதன் பிறகு 22ஆம்தேதி காலை 8.30 மணி முதல் 24ஆம் தேதி காலை 8.30 மணி வரை இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்” என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil