Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதியார் தலைப்பாகையில் காவி நிறம் ஏன்? வடிவமைப்பாளர் விளக்கம்

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (11:00 IST)
நம்மூர் அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக்கி பிரச்சனை செய்யவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது. கடந்த இரண்டு நாட்களாக இந்தி திணிப்பு என்ற போராட்டத்தை அறிவித்து வரும் அரசியல் கட்சிகள் தற்போது அடுத்த பிரச்சனையாக தமிழக அரசின் பாடநூல் ஒன்றின் அட்டையில் உள்ள பாரதியாரின் தலைப்பாகை நிறத்தை கையில் எடுத்துள்ளனர்.
 
பாஜகவின் அடிமை அரசாக இருக்கும் அதிமுக, பாடநூல்களிலும் காவியை புகுத்தி வருவதாகவும், பள்ளி மாணவர்களிடையேயும் காவியை புகுத்தி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் ரூ.200க்காக போராடும் போலி போராளிகள் தங்களுடைய புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த பாடப்புத்தகத்தை வடிவமைத்த டிசைனர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 'பாரதியாரின் தலைப்பாகை நிறம் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே அந்த வடிவமைப்பை உருவாக்கியதாகவும், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார்
 
இருப்பினும் திருப்தி அடையாத ரூ.200 போராளிகள் மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments