Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்; தமிழக அரசு இடைக்கால மனு

Webdunia
திங்கள், 7 மே 2018 (15:25 IST)
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் பெரும் அளவில் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கர்நாடகாவில் நடக்க உள்ள தேர்தலை காரணம் காட்டி வருகிறது. 
 
ஆனால் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
 
4 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகா இந்த மாதம் தண்ணீர் திறந்து விட இயலாது என்று தெரிவித்துவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments