Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி சிட்ஃபண்ட் மோசடி! தகவல் கொடுத்தால் சன்மானம்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (08:37 IST)
தமிழகத்தில் நிதி நிறுவனங்கள் நடத்தி மக்களிடம் ஏராளமான பணத்தை பெற்று ஏமாற்றிய மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் என காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டி அதிக பணத்தை ஏமாற்றிய நிறுவன அதிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த வகையில் முக்கியமாக ஆரூத்ரா கோல்டு, ஹிஜாவு அசோசியேட்ஸ், எல்.என்.எஸ் சர்வதேச நிதி சேவை உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிறுவனங்கள் மக்களிடம் பணத்தை பெற்றுவிட்டு மாதம்தோறும் வட்டி மற்றும் முதலீட்டு தொகையையும் தராமல் ஏமாற்றியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அந்த வகையில் இந்த நிதித்துறை நிறுவனங்களில் நடத்திய சோதனையில் ரூ.9 ஆயிரம் கோடி பொது மக்களின் பணத்தை ஏமாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வரும் நிதி நிறுவன அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments