Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலசலப்பில் தமிழக காவல்: முதல்வர் பாதுகாப்பில் குறை; போலீஸாருக்கு மெமோ

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:54 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதால் 44 போலீஸாருக்கு மெமோ அனுப்பட்டுள்ளதால், தமிழக காவல்துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 25 ஆம் தேதி திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். தரிசனத்தை முடித்துக்கொண்டு காரில் வேலூர் வழியாக சேலத்துக்கு சென்றார். 
 
அப்போது வேலூரில் பாதுகாப்பையும் மீறி தொண்டர்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். தொண்டர்களால் முதல்வருக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. 
 
இதனால், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸ், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 40 போலீஸார் என 44 பேரிடம் விளக்கம் கேட்டு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், அவர்களின் விளக்கத்தில் திருப்தி இல்லையென்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments