Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் கடையடைப்பு : காவிரி போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (11:45 IST)
திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இன்று அறிவித்த கடையைடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

 
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வணிகர் சங்கமும் ஆதரவு கொடுக்க, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 
 
பொதுவாக ஆளும் கட்சியின் சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு மட்டுமே பொதுமக்கள் பெரும்பாலும் ஆதரவு அளிப்பார்கள். ஆனால், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய கடையடைப்பிற்கு பொதுமக்கள் தங்கள் அமோக ஆதரவை அளித்துள்ளனர்.
 
கட்சி எதுவாயினும், காவிரி நீர் பிரச்சனை என்பதாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டும் விதத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடையடைப்பு மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments