Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் டெல்லிக்கு திடீர் அழைப்பு: பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (07:52 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக இபாஸ் ரத்து செய்ய வேண்டும் என்றும் நீட்தேர்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை
 
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் நேற்று திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனித்தனி விமானங்களில் டெல்லி சென்ற உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ் கே பிரபாகர், தமிழக முதல்வரின் செயலாளர் செந்தில்குமார், தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு திடீரென டெல்லி அழைப்பு விடுத்துள்ளது
 
இந்த அழைப்பை ஏற்று அதிகாரிகள் விமானங்கள் மூலம் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் இன்று தமிழக அரசின் அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என்றும் இந்த ஆலோசனையின்போது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் திடீரென டெல்லி சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments