Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி தீவிரம்! – மருத்துவ ஆலோசனை குழுவில் முடிவு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (09:11 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த மருத்துவகுழு கலந்தாலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஏதேனும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தால் விதிமுறைகளுக்கு உட்பட்டு மார்ச் 30க்குள் அவற்றை முடிக்க வேண்டும்.

அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் 100 சதவீதம் பணியாளர்களுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.

பேருந்து மற்றும் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா அதிகமாக பரவும் மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments