Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து! – கல்வி இயக்குனர் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (09:17 IST)
பொறியியல் படிப்புகளில் அரசு இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என தொழில்நுட்ப கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.

பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், இவ்வாறாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் முதலியவற்றையும் அரசே ஏற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் கட்டணம் கட்ட சொல்லி வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ”அரசு இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டண தொகையை அரசு விரைவில் விடுவிக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும். இதை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு சம்பந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments