Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர் நலனுக்காக ஆலோசனைக்குழு: தமிழக அரசின் அரசாணை!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (14:38 IST)
இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசு அரசாணை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது
 
இலங்கை தமிழர்களின் நலன் காக்கப்படும் என தேர்தலுக்கு முன்பே திமுக வாக்குறுதி அளித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஏற்கனவே இலங்கை தமிழர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் நலன் காக்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் 20 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.
 
இலங்கை தமிழர் நலன் காக்க கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டிருந்த நிலையில் அதில் ஒரு அறிவிப்பாக தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையை அடுத்து மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்கள் அரசுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments