Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாள் வேலை திட்டம் இனி 150 நாட்கள்! – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:37 IST)
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் 100 நாள் வேலை இனி 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 100 நாள் வேலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.273 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி இந்த தொகை ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments