Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவிற்கு ஒரு நாள் ஊதியத்தை அளிக்கும் தமிழக அரசு ஊழியர்கள்...

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:13 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்காக தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நிதியாக அளிக்க முன்வந்துள்ளனர்.

 
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளிலில்லாத அளவுக்கு கனமழை பெயது வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவுகளின் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர் தங்கள் உடமைகள் மற்றும் வீடுகளை இழந்துள்ளனர். 
 
எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் திரையுலகினர் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.  அதேபோல், தமிழகத்தில் இருந்து பலரும் ஆன்லைன் மூலமாக கேரள மாநிலத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு உதவ தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வந்துள்ளனர். அதாவது, தங்களின் ஒருநாள் ஊதியத்தை கேரளாவிற்கு அளிக்கும் படி அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments