Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடுமலை சங்கர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (09:17 IST)
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி மீறி காதல் திருமணம் செய்து கொண்டதற்காக உடுமலைப்பேட்டை சங்கர் என்பவரை அவரது மனைவி கவுசல்யாவின் உறவினர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவுசல்யாவின் அப்பா சின்னசாமி உட்பட 6 பேர் குற்றவாளிகளாய் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்ததுடன், மற்ற 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்த விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments