Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி நாளில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி - தமிழக அரசு

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (11:28 IST)
தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என தமிழக அரசு  அறிவித்துள்ளது
 
இதன்படி தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும்  பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், திறந்தவெளியில் ஒன்றாக கூடி பட்டாசு வெடிப்பதாக இருந்தால்  முன் அனுமதி பெற வேண்டும் என்றும், மருத்துவமனை, கோவில் மற்றும் அமைதி தேவையான பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும்,  அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments