Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீட்பு கருவி உருவாக்கினால் 5 லட்சம் பரிசு! – தொழில்நுட்பத்துறை செயலர்

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (16:29 IST)
ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு நவீன கருவிகளை உருவாக்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசளிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார் தொழில்நுட்பத்துறை செயலர்.

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எவ்வளவு அதிநவீன எந்திரங்கள் உபயோகித்தும் குழந்தையை மீட்க முடியாதது தொழில்நுட்ப வளர்ச்சியில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், குழந்தைகளை மீட்க சரியான உபகரணம் கண்டுபிடிக்கப்படாததை நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இதனால் ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை உடனடியாக மீட்க நவீன சாதனங்கள் தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இந்த கருத்தை முன்னிறுத்தி ஐஏஎஸ் அதிகாரியும், தொழில்நுட்பத்துறை முதன்மை செயலருமான சந்தோஷ்பாபு தமிழக அரசுக்கு ‘ஹேக்கத்தான்’ போட்டி ஒன்றை நடத்த பரிந்துறை செய்துள்ளார்.

இந்த போட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் நவீன் கருவிகளை அறிமுகப்படுத்தலாம். அதில் சாத்தியமானதும், திறம்பட செயல்படுவதுமான உபகரணத்திற்கு 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments