Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்கை முழுவதும் நிரப்ப அனுமதி.. ஹவுஸ் ஃபுல்தான்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (12:53 IST)
பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் திரையரங்குகளை முழுவதும் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதித்தால் மட்டுமே டிக்கெட் விலையை உரிய கட்டணத்தில் வழங்க இயலும் என்றும், திரையரங்குகளும் நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என்றும் அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இதுகுறித்து நடிகர் விஜய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய நிலையில் தற்போது திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அமர வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் பட வெளியீட்டிற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments